barthee

Member since January 11, 2008

follow this user
  • 444 videos
  • 0 following
  • 1 follower

Recent Activity

கடல் கன்னி வலையில் – உண்மை நிலவரம்!
அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.
இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். அந்த வீடியோவை பார்க்காதவர்கள் இதோ கீழே பார்க்கவும். 

Posted in அறிவியல்
சின்னஞ்சிறு வயதில்…
Posted in பொதுவானவை
தாயின் பாதணியும், சேயின் பாதுகாப்பும்
தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.
எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.
சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும்.  காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.
எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை [...]
Twinkle Twinkle littl star… நகைச்சுவையாக!
Twinkle Twinkle littl star… என்னும் அரிவரிப் பாடலை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப்பாடலை ‘ரேவதி சங்கரன்’ என்னும் தமிழ் நடிகைஒருவர் நகைச்சுவையாக பாடியுள்ளார். அந்தவீடியோவை ஏற்கனவே பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பார்த்து மகிழுங்கள்!
(இந்த வீடியோவை அனுப்பிய நேயர் Kirujanthini Keatheeswaranக்கு நன்றி)

Posted in பொதுவானவை
மழைத்துளி விழுந்தது, எனக்குள்ளே சிலிர்த்தது!
மழை என்றாலே மனதுக்குப் பிடித்த ஒன்றுதான்.
திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும்.
 என்னவளும் மயிலைப்போல் மழையைக் கண்டு மகிழ்பவள். வானினிலிருந்து விழும் மழைத்துளிகளை உள்ளம் கைகளினால் பட்மிண்டன் விளையாடியது எல்லாம் ஒரு கனாக்காலம்!
‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை’ என்று இந்த மழைக்குறளை திக்குமுக்காடி மனப்பாடம் செய்ததெல்லாம் பள்ளிக்காலத்து கவிதைகள்!
“வெயிலுக்கும், மழைக்கும் கல்யாணம்…” என்று ஒரு பாட்டு சிறுவயதில் பாடியது ஞாபகத்திற்கு வருகின்றது.
அப்படிப்பட்ட ஒரு கார்காலம்தான் [...]
காதல் தன் வேலையை காட்டுதடி!
காதல் இனிமையானது.  ஆனால் அந்தக் காதலில் உள்ள வலியும், வேதனையும் காதல் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
தொட்டதும் துளிர் விடுவதுபோல் எந்தக்காதலும் இருந்ததில்லை. காதல் கொண்டவர் முதலில் வாடி, பின்னர் கூடிய சம்பவங்கள்தன் இதன் அதிகாரம் முழுவதும்.
காதல் எமக்காக மலர்ந்தாலும், அதன் வாசணையின் மொழி தெரியாததால் எத்தனை ஏக்கங்கள்! எவ்வளவு தவிப்புக்கள்!!

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் [...]
Tim Hortons நேயர் விரும்பிக்கேட்ட பாடல்
புருவத்தை உயர்த்தி பார்த்த காலம் எல்லாம் புராணக் கதைகளாகிவிடுமோ என அச்சாமாக உள்ளது!
சாதாரணமாக எடை போட முடியாத இந்த புலம்பெயர் தமிழர்களின் சக்திபற்றி உலகமே அதிசயித்த காலம் எல்லாம் என்னவாயிற்று என்று எடைபோட வேண்டியுள்ளது.
வேறு யாவருக்கும் இல்லாத உரிமையும், கீர்த்தியும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் இலங்கை தமிழருக்கு கடவுள்போல் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சாமிமார்கள்தான்.
இலங்கையில் அனாதரவாய் இருக்கும் தமிழருக்கு அபயம் கொடுக்க இருக்கும் சாமிமார்கள்தான் இந்த புலம்பெயர் தமிழர்கள்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆட்களே [...]
இலங்கையிலும் கவர்ச்சி அரசியல்!
முன்நாள்  மிஸ் சிறிலங்காவும், சிங்களத் திரைப்பட நடிகையும், மாடல் அழகியும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமான அகர்சா அனார்க்கலி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி சென்றமாதம் வெளிவந்தது.
இவர் மங்கள சமரவீர எம்.பி. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளராகவும் நடிகை அனார்க்கலி கடமைப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சியான, புகழ்மிக்க நடிகைகள் அரசியலில் அப்பப்ப வருவதும், வந்தவர்களில் சிலர் உச்சிக்கு சென்றதும் எமக்கு தெரியும். அழகுடன் கொஞ்சம் சாதுரியமும் இருந்துவிட்டால் இவர்களின் வளர்ச்சி சொல்லத்தேவையில்லை. [...]
தமிழ் பாட்டுக்கு வெள்ளைக்காரர்கள் போட்ட Remix !
வெள்ளை இன மக்கள் எம் தமிழ்ப் பாட்டுக்கு   ஒரு   Remix   அதுவும்  ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.
 பிரபுதேவாவின் இந்த பாடல் காட்சியை ஒருதரம் பாருங்கள். அதன்பின் கீழே உள்ள ஆங்கில பாடலையும் பாருங்கள்.


எங்கள் தமிழ் பாடல்காட்சி மாதிரித்தான் அவர்களும் பாடி ஆடியுள்ளனர். ஆனால் ஏன் அவர்கள் ஆட எமக்கு சிரிப்பு வருகின்றது?
ஒருவேளை தமிழ்ப்பாட்டை அதே உருவ ஒற்றுமை இல்லாதவர்கள் பாடி ஆடும் போது அப்படி தோன்றுகின்றதா? அப்படியானால், தற்போது நம் தமிழ் இளைய சமுதாயம் பல ஆங்கிலப் பாடல்களை ஆடியும், [...]
இப்படியும் ஒரு பாக்கிஸ்த்தான் மாணவன்
நாகரிகத்தின் வளர்ச்சியில் நானா, நீயா உயர்ந்தவன் என்று ஆளாளுக்கு அடித்துக்கொள்வது வளக்கம். அதுவும் போட்டியான நாடுகளின் மக்களை ஒருவர் ஒருவரை கிண்டல் பண்ணுவது சொல்லி மாளாது.
ஒரு இந்தியரின் கையில் கிடைத்த பாக்கிஸ்தான் மாணவரின் அசட்டுத்தனமான வீடியோ காட்சியை கடைவிரித்துள்ளார்.
அப்படி என்ன செய்துவிட்டார் இந்த பாக்கிஸ்தான் மாணவர்..?
நீங்களே பாடுங்கள்…!

Posted in பொதுவானவை
இதனைப் பார்த்துவிட்டு கார் ஓட்டுங்கள்!
நீங்கள் கைத்தொலைபேசி பாவிப்பவரா? Text message அனுப்புபவரா? தாராளமாக இந்த அறிவியல் யுகத்தில் அதனை செய்யலாம்.  விஞ்ஞான  வளர்ச்சிக்கு  நான்  எதிரானவன் அல்ல.  ஆனால் வாகனம் ஓட்டிக் கொண்டு இதனை செய்யாதீர்கள்.
நான் பல பேரைப் பார்த்து இருக்கின்றேன்.
அதும் Teen age காரர்கள் அதிகமாக இந்த வேலை செய்வதை. அவர்களும் சிக்கலுக்குள்ளாகி அப்பாவி பொதுசனத்தையும் அனியாயமாக  கொல்லும் பாதக செயலை செய்பவர்களாக இருக்கின்றனர்.
சரி, ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்… திருந்துவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் [...]
அழகூரில் பூத்தவளே…
நீ சுருட்டிப் போட்ட முடி… மோதிரமாய் ஆக்கி,
குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளந்து,
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆகி…
அடடா… காதலிக்கும் போது என்னென்ன கற்பனைகள்… ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பனையில் போட்டி வரும் நேரம் இந்த காதலிக்கும் நேரம் தான்.
ஆனால் பிற்காலத்தில் தங்கள் துணையுடன் இதில் ஒரு வரியாவது சரிவர நடக்கின்றார்கள்?
பல காதலர்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்கும் போது மனங்களில் பாறாங்கல் தான் உடையும்…
இதையும் மீறி இன்பமாய் ரசிக்கும் சிறு கும்பலும் நமக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
அவர்கள் மன்மதனால் ரட்சிக்கப்பட்டவர்கள் என்றுதான் [...]
தமிழ் தக்காளிக்கும், ஸ்பெயின் தக்காளிக்கும் உள்ள அந்தஸ்த்து
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் மக்களும், சுற்றூலா பயணிகளும் ஆர்வமாக பங்கு பற்றும் ஒரு விளையாட்டு இந்த Tomatina என்றழைக்கப்படும் தக்காளி எறியும் திருவிழா!
சுமார் 110 தொன் எடையுள்ள தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதனை மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் வீசி எறிந்து கொண்டாடுவார்கள்.
 

ஒரு உணவுப்பொருளை இப்படி அனியாயமாக்குகின்றீர்களே என இவர்களைக் கேட்டால்,
“தக்காளிச்சாறு உடலுக்கு நல்லதொரு பொருள். அத்துடன் இப்படி ஒரு விளையாட்டு மனதுக்கும் குதூகலம் அளிக்கும் நிகழ்வு,  அதைவிட தக்காளியால் எறிந்தால் யாருக்கும் நோகவும் [...]
இழையராஜாவின் ரசிகர்களே ஓடிவாருங்கள்!
நீங்கள் இளையராஜாவின் ரசிகர்களா?
ஆம் என்றால் இந்தப்பாட்டும் உங்களுக்குப் பிடிக்கும்! கூடவே அவரைப்பற்றி தெரியாதோருக்கு தெரிந்துகொள்ளவும் பிடிக்கும்

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் ஜூன் 2, 1943ல் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், [...]
பூமி வளர்ந்தது எப்படி? திருத்திய பதிவு
(பூமி வளர்ந்தது எப்படி என் முன்னர் பதிவேற்றப்பட்ட பதிவில் உள்ள வீடியோ வேலைசெய்யாமல் இருந்ததை நேயர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
நன்றி நேயரே,
தற்போது அந்த வீடியோ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.)
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எம் பூமியில் எப்படி கண்டங்கள், நாடுகள் உருவாகியது என்று ஒரு அருமையான வீடியோப்படம்.

Posted in அறிவியல்
கண்ணுக்குள் நூறு நிலவா – வீடியோ
இந்தபாடலை கேட்கும் போது பலருக்கு பழைய ஞாபகம் வரும். கடிதம் எழுதாத காதலர்களே இல்லை எனலாம்… கைக்குடையைக்கூட கைமாற்றிய கதைகூட உண்டு…
ஒரு நெயரின் மன நினைவலைகளுடன் நாமும் நீந்துவோம்!

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
கண்ணுக்குள் நூறு [...]
Miss Universe 2009 – வீடியோ
எல்லா அழகிகளையும் பார்க்க நேரம் எங்கே இருக்கு சும்மா ஒரு பத்து பதினைஞ்சு Top ல் உள்ளதுகளை பார்த்தால் போதும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அட இதைவிட வேறு என்ன வேலை போட்டியிட்ட 85 பேரையும் பார்க்க வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அடடா அழகிப்போட்டி என்றால் நீச்சல் உடையில் எல்லாம் அங்கும் இங்கும் நடந்து திரிவார்களே அதெங்கே ஹி…ஹி… என்று ஜொல்லுவிடுபவர்களுக்கு இந்த வீடியோ.(தமிழ் சினிமாவில் பாட்டு காட்சிக்கு தம் அடித்துவிட்டு வருவது [...]
கந்தசாமி – விமர்சனம்
யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து…
 பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் [...]
ஒரேநாள் உனைநான்…பாடல்
எம் நேயர் விரும்பிக்கேட்ட பாடல்…

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன.
(ஒரே நாள்..)
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன
(ஒரே நாள்..)
பஞ்சனை [...]
1 3 23