தொடத்தொட மலர்ந்ததென்ன - இந்திரா
மு.கு: பாடலாசிரியர் யாரென்று தெரிந்தால் கூறவும்
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன * 2
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன * 2
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
அந்த இளவயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித்தடம் பதித்தோம் யாரழித்தார்
நந்தவக்கரையில் நட்டுவைத்த செடியில்
மொட்டு விட்ட முதற்பூவை யார் பறித்தார்
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என்வசம் நானில்லை
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பனிதனில் குளித்த பால் மலர் காண
இருபது [...]